உண்மை சுடும்
நான் அடிப்படையில் ஒரு விவசயக்குடும்பத்தைச் சேர்ந்தவன் பயிர்களை நேசிப்பவன் ஆனால் எம் வாழ்க்கை என்றுமே வளமாக இருந்தது இல்லை ! காரணம் பல ,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சொன்னது போலவே"காடுவேளைஞ்சென்னமச்சா நமக்கு கையும்காலும் தானே மிச்சம் "என்றானே அது இன்றளவும் உண்மையாகவே உள்ளது
அது மாறி விடாமல் காப்பாற்றிக்கொண்டு உள்ளார்கள் இங்குள்ள அரசியல் வியாதிகள் .
உங்களுக்கு தெரியும் தமிழ் சினிமா என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் !
ஆனால் தமிழ்த் தேசியம் என்றதும் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டம்!
இங்கிருந்து தான் வறுமைக்கு எதிராகவும் !அரசுக்கு எதிராகவும் முதன் முதலில் போராட்டம் வெடித்தது ,அது இன்றும் பல் வேறு வடிவங்களில் தொடர்கிறது ,ஆனால் இன்னும் கூட அரசுகள் ஏன் இந்த போராட்டம் என்னும் புரிந்துணர்வை எட்டவில்லை அல்லது புரியாதது போல் நடிக்கிறது ,இது தொடருமானால் இந்த போராட்டங்களும் தொடராத்தான் செய்யும் ,வறுமையால் இவர்கள் இழந்தது கல்வி ,வேலை வாய்ப்பு ,அதனால் தொடரும் ஏற்றத் தாழ்வு !
கன்னித்தமிழ் நாடு
கிருஷ்ணசாமி சேகர்
No comments:
Post a Comment