தமிழுக்கு அகராதி தொகுத்தவர் 'வேர்ச்சொல்' தேவநேயப்பாவாணர்
திராவிட ஒப்பிலக்கணம் தந்தவன் 'கால்டுவெல்'
இலக்கு
பாதைகள் அற்ற பாதையில்!என் பயணம் !!முடியும் போதுதான் தெரியும்
எங்கு இருக்கிறேன் என்று !!
சாவு கூட சில நேரம்
வந்து போனது !!
என் பாதைகளில்
நிழல் தந்த மரங்களை...
எப்படி நினைவிற் கொள்வது ???
காலத்தை தின்று கொண்டு
வயது போகிறது !!
நான்
வண்ண ஓவியம் என ...
இருமாந் திருக்கையில்
மேகக் கூட்டமாய்
கலைந்து போனது !!
பள்ளமில்லா உலகம்
பாலைவனம் !!
என்னை இப்படி வேண்டுமானாலும்
நினைவில் கொள்ளலாம் !!!
ஒரு ....
ஏழை விவசாயின் மகன்,
ஒரு ....
தமிழன் ,
ஒரு ....
போராளி ?
ஒரு ....
தந்தை ,
ஒரு ....
மனிதன் !!!
அனால் அதை
காலம் முடிவு செய்கிறது .....
நான் ....!!!
அதனுடன் செல்கிறேன் .
கன்னித்தமிழ் நாடு,
கி.சேகர்